Wednesday 7 September 2016

பிள்ளையார் சுழி...
05/09/2016 அன்று போனஸ் குழுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. NFTE மற்றும் BSNLEUசங்கங்கள் கலந்து கொண்டன. 
 வருவாய் உயர்வை மட்டுமே கணக்கில் கொண்டு போனஸ் தொகை நிச்சயிக்கப்படும் என்பது நிர்வாகத் தரப்பின் கருத்தாக வெளிப்பட்டது.

வெறும் வருவாய் உயர்வை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் 
புதிதாக கொடுக்கப்பட்டுள்ள தரைவழி... செல் மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்புக்களை கணக்கில் கொண்டு போனஸ் தொகை தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ஊழியர் தரப்புக் கோரிக்கை. 
நமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

எனவே  நேற்றைய கூட்டம் எந்த முடிவுகளும் எட்டப்படமால் முடிவுற்றது. பிள்ளையார் சதுர்த்தி அன்று கூட்டம் நடைபெற்றாலும் 
இந்த ஆண்டிற்கான போனஸ் பெறுவதற்கு ஊழியர் தரப்பால் 
பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நன்றி: காரைக்குடி NFTE

No comments:

Post a Comment